!)"அவர்கள் என்னைக் கொல்லக்கூடும், ஆனால் அவர்களால் என் கருத்துக்களைக் கொல்ல முடியாது. அவர்களால் என் உடலை நசுக்க முடியும், ஆனால் அவர்களால் என் ஆவியை நசுக்க முடியாது"
2)"புரட்சி என்பது மனிதகுலத்தின் தவிர்க்கமுடியாத உரிமை. சுதந்திரம் என்பது அனைவருக்கும் அழியாத பிறப்பு உரிமை"
3)"நான் சிறையில் கூட சுதந்திரமாக இருக்கிறேன் என்று ஒரு பைத்தியக்காரர்"
4)"நான் லட்சியமும் நம்பிக்கையும் வாழ்க்கையின் வசீகரமும் நிறைந்தவன். ஆனால் தேவைப்படும் நேரத்தில் எல்லாவற்றையும் நான் கைவிட முடியும் '
5)"காது கேளாதோர் கேட்க வேண்டும் என்றால், ஒலி மிகவும் சத்தமாக இருக்க வேண்டும்"
6)இரக்கமற்ற விமர்சனம் மற்றும் சுயாதீன சிந்தனை ஆகியவை புரட்சிகர சிந்தனையின் இரண்டு பண்புகளாகும். காதலர்கள், பைத்தியக்காரர்கள் மற்றும் கவிஞர்கள் ஒரே விஷயங்களால் ஆனவர்கள்"
7)"புரட்சி" என்ற வார்த்தையை அதன் நேரடி அர்த்தத்தில் ஒருவர் விளக்கக்கூடாது. இந்த வார்த்தையைப் பயன்படுத்துபவர்கள் அல்லது தவறாகப் பயன்படுத்துபவர்களின் நலன்களுக்கு ஏற்ப பல்வேறு அர்த்தங்களும் முக்கியத்துவமும் கூறப்படுகின்றன. சுரண்டலின் நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கு இது இரத்த உணர்வைத் தூண்டுகிறது புரட்சியாளர்களுக்கு இது ஒரு புனிதமான சொற்றொடர் "
8)"வெடிகுண்டுகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் ஒரு புரட்சியை உருவாக்கவில்லை. புரட்சியின் வாள் யோசனைகளின் கல் மீது கூர்மைப்படுத்தப்படுகிறது"
9)"உழைப்பு என்பது சமூகத்தின் உண்மையான நிலைத்தன்மை"
10)"மக்கள் நிறுவப்பட்ட விஷயங்களுக்கு பழக்கமாகி, மாற்றத்தின் யோசனையில் நடுங்குகிறார்கள். இந்த சோம்பல் ஆவிதான் புரட்சிகர ஆவியால் மாற்றப்பட வேண்டும்
இந்த முயற்சி 1945 ஆம் ஆண்டு நடந்தது. மும்பையில் இருந்து புனேவுக்கு ரயிலில் காந்தி வந்துகொண்டிருந்தார். மஹாராஷ்டிராவில் ரயில் கசராவை அடைந்தபோது கற்கள் மற்றும் மரக்கட்டைகள் ரயில் பாதையில் குவிக்கப்பட்டிருந்தன. ரயில் ஓட்டுநர் இந்த கற்களை பார்த்ததும் உடனடியாக தன்னால் முடிந்த வலு கொண்டு பிரேக் போட்டார். இரயில் எஞ்சின்கள் கற்கள் மீது மோதியது இருப்பினும் பெரும் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டன. காந்தி புனேவை சென்றடைந்ததும் '' என்னை யார் கொல்வதற்கு விரும்புகிறீர்களோ தாராளமாக செய்யுங்கள் ஆனால் என்னுடன் வரும் மக்களுக்கு எந்த தீங்கும் இழைக்காதீர்கள்'' என்றார்.
அது 1892-ம் ஆண்டு வெயில் கக்க துவங்கிய ஏப்ரல் மாதம். சென்னை விக்டோரிய டவுன் ஹாலில் சென்னை மஹாஜன சபையின் கூட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. அப்போது பரந்து விரிந்திரிந்த சென்னை மாகாணத்தின் அனைத்து ஜில்லாக்களிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். மக்களின் பிரச்னைகளை வந்திருந்த பிரதிநிதிகளிடம் கேட்டு, விவாதித்து முக்கியமானவற்றை பிரிட்டிஷ் அரசிற்கு கோரிக்கையாக அனுப்புவது தான் அந்த கூட்டத்தின் நோக்கம். அந்த கூட்டம் நடந்த கூடம் முழுவதும் மேட்டுக்குடி மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள். அந்த கூட்டத்திற்கு நீலகிரியிலிருந்து நல்ல அடர் கருப்பு நிறத்தில் நடுவாந்திர உயரத்தில் ஒருவர் வருகிறார். சிலர் அவரை முகசுளிப்புடன் பார்க்கிறார்கள், பலர் அவரை உதாசினப்பார்வையில் சீண்டுகிறார்கள். தீர்க்கமான மனப்பாங்கு கொண்ட அவர், இது எதையும் பொருட்படுத்தவில்லை. தாம் வந்த நோக்கம் தான் அவருக்கு பெரிதாக தோன்றியது.
கூட்டம் ஆரம்பிக்கிறது, ஒவ்வொரு கோரிக்கையாக வாசிக்கப்படுகிறது, அலசப்படுகிறது. அடுத்து அந்த நீலகிரி மனிதர் எழுதிய கோரிக்கை வருகிறது. அதை வாசிக்க அந்த சபையின் தலைவர் அரங்கைய நாயுடு தயங்குகிறார். பின் சுதாரித்து, “தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து எழுதப்பட்டு இருக்கிறது... பிரிட்டிஷ் அரசிற்கு இது குறித்து நன்கு தெரியும் என்பதால்... நாம் இந்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க தேவையில்லை... நாம் அடுத்த கோரிக்கைகளை பார்ப்போம்...” என்று அதை சுலபமாக கடக்க முயல்கிறார். கூட்டத்திற்கு வந்திருந்த மேட்டுக்குடி மக்கள் பலருக்கும் அது தான் சரியெனப்பட்டது. எல்லாரும் அமோதிக்கிறார்கள். அப்போது நீலகிரியிலிருந்து வந்திருந்த அந்த மனிதர் எழுகிறார். தலைவரை பார்த்து பேசத் துவங்குகிறார். அவர் பேசியதன் சாரம் இது தான், “சில பிரிட்டிஷ் அதிகாரிகள் எங்கள் கஷ்டங்களை உணர்ந்து இருக்கிறார்கள். எங்களுக்கு சில உதவிகளையும் செய்து இருக்கிறார்கள். ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள் படும் வேதனைகளுக்கு காரணமான நீங்கள் அல்லவா, அவர்களை முன்னேற்றுவது குறித்து ஏதேனும் செய்ய வேண்டும். அவர்களின் இழிநிலைக்கு காரணமான நீங்களே இவ்வாறு கைக்கழுவி விடுவது போல் பேசுவது நியாயமாகுமா...?” என்கிறார் தீர்க்கமாக.
அரசு சபையில் முதல் கலக குரல்;
கூட்டம் சலசலக்க துவங்குகிறது. தலைவரை பார்த்து இப்படி கேள்வி கேட்பதா என்று அந்த மாநிற மனிதர்கள் முணுமுணுக்க துவங்குகிறார்கள். தலைவர் அனைவரையும் அமைதி படுத்துகிறார். “இந்த சபை உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்...?” என்கிறார் கொஞ்சம் எள்ளலுடன்.
அந்த கரிய மனிதர், “ஐயா... பலர் ‘தெய்வம் அனைவருக்கும் பொதுவானது’ என்கிறார்கள். அது உண்மையாயின் தெய்வம் குடிக்கொண்டுள்ள கோயில்களும் அவ்வாறாகத்தானே இருக்க முடியும். எங்களுக்கும் கடவுளை நேரில் தரிசிக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்கும் அல்லவா... ஏன் எங்களை மட்டும் கோயில்களுக்கு அனுமதிக்க மறுக்கிறீர்கள்...?” என்று மிக மென்மையான குரலில் கேள்வி எழுப்புகிறார்.
இந்த கேள்வியை முடிப்பதற்கு முன்பே, பலர் காதுகளை பொத்திக் கொள்கிறார்கள். சிலர் இவரை பேசவிட்டதே தவறு என்று தலைவரை கடிந்து கொள்கிறார்கள்.
ஒரு அரசு கூட்டத்தில் தீண்டாமைக்கு எதிராக முதல் கலக குரலை எழுப்பிய அந்த மனிதர் தான் அயோத்திதாசப் பண்டிதர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட காத்தவராயன். தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்பு போராளியும் இவரே.
அயோத்தி தாசர் பண்டிதரை பெரியருக்கெல்லாம் பெரியார் என்றே சொல்லலாம் ,ஏனென்றால் திராவிட தமிழன் ,தமிழன் நாளிதழ் ,ஆரிய கடவுள் எதிர்ப்பு ,புத்த மதம் போன்ற சிறப்பிற்கு விதை போட்டவர்தான் அயோத்தி தாசர் பண்டிதர்.
பிறப்பு ;-
1845-ம் ஆண்டு, மே மாதம் 20-ம் நாள் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பிறந்த அயோத்தி தாசர், பின்பு நீலகிரிக்கு புலம்பெயர்ந்தார். தமிழ், ஆங்கிலம், பாலி ஆகிய மொழிகளை நன்கு கற்றறிந்தார். சித்த மருத்துவத்திலும் நிபுணத்துவம் பெற்றார். எவ்வளவு தான் கற்றாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான சமூக அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று வேதனை உற்ற அவர், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தீவிரமாக செயல்பட துவங்குகிறார்.
ஒரு பைசாத் தமிழன்:
1907-ம் ஆண்டு ஜூன் மாதம், ‘ஒரு பைசாத் தமிழன் ’ என்ற இதழை துவங்குகிறார். இதழுக்கான காரணமாக அவரே குறிப்பிட்டவை, “உயர் நிலையும், இடைநிலையும், கடை நிலையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றை கற்பிப்பதற்காக சில தத்துவவாதிகளும், இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும், இலக்கியவாதிகள் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிகையை ‘ஒரு பைசாத் தமிழன் ” என்கிறார். ஓராண்டுக்கு பிறகு, வாசகர்களிடம் வேண்டுகோளுக்கு இணங்க ‘தமிழன்’ என்று இதழ் பெயரை மாற்றிவிடுகிறார்.
இலவச கல்வி மற்றும் நிலம் வழங்குதல் ;-
முதன் முதலாக தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்காக குரல் கொடுத்தவர் அயோத்திதாச பண்டிதர் தான். முன்னேற்றத்திற்கு கல்வி மட்டுமே வழிவகை செய்யும் என்று நம்பிய அவர், தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு நான்காம் வகுப்பு வரை இலவச கல்வி கொடுக்க வேண்டும் மற்றும் வெறுமனே கிடக்கின்ற நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.
போராட்ட களத்தில் மட்டுமல்ல, பெளத்த பார்வையில் பல ஆய்வுகளை நடத்தி இருக்கிறார். சாக்கிய முனிவரலாறு, நந்தன் சரித்திர தந்திரம், பூர்வ தமிழ்மொழியாம் புத்தரது ஆதி வேதம், திருவள்ளுவர் வரலாறு, புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி உட்பட பல ஆய்வு நூல்களையும் எழுதியவர் அயோத்திதாசப் பண்டிதர்.
அயோத்தி தசாரின் சிறப்பு பண்புகள் ;-
தமிழ் மக்கள் தமது வாழ்வில் கடைப்பிடித்துவரும் திருமணச் சடங்கு, ஈமச் சடங்கு உள்ளிட்டப் பல்வேறு சடங்குகளுக்கும் ; கார்த்திகை தீபம்,பொங்கல், தீபாவளி முதலான பண்டிகைகளுக்கும் பௌத்த நோக்கில் பொருள் கூறியவர். புகழ்பெற்ற சித்த மருத்துவர். 1876ல் நீலகிரியில் ‘அத்வைதானந்தசபை’யையும், 1891ஆம் ஆண்டு ‘திராவிட மகாஜனசபை’யையும் நிறுவியவர்.
‘தமிழன்’ இதழின் நிறுவனரும் , ‘தமிழ்த் தேசியத் தந்தை’யுமான அயோத்திதாசப் பண்டிதர் (1845-1914) பல்வேறு சிறப்புகள் கொண்ட பேரறிஞர். இடஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு, தமிழ் மொழியின் சிறப்பு முதலானவை குறித்து தமிழ்ச்சூழலில் வேறு எவரும் பேசுவதற்கு முன்பே பேசியவர். தமிழ் பௌத்த வரலாற்றை மீட்டெடுத்து பௌத்த நோக்கில் தமிழ் இலக்கிய நூல்கள் பலவற்றுக்கும் விளக்கமளித்தவர்.
பாம்புகள்:
உலகளவில் 2,968 வகையான பாம்புகள் உள்ளன. இதில், இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பாம்பு வகையில் நான்கு மட்டுமே விஷமுள்ளது. மற்றவை விஷமற்றது. அவைகள் நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் மற்றும் சுருட்டை விரியன்.
நல்லபாம்பு: பழுப்பு, மஞ்சள் அல்லது கறுப்பு நிறங்களை கொண்ட நல்ல பாம்பு படம் எடுக்கும் தன்மை கொண்டது. ஒரு மீட்டர் நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 2.2 மீட்டர் நீளம் வரை வளரும். இவைகள் எலி வலை மற்றும் கரையான் புற்றுகளில் வாழும். நல்ல பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தையும், சுவாச மண்டலத்தையும் தாக்கி மரணம் விளைவிக்கக் கூடியது. சென்னை மற்றும் புறநகரில் இவைகள் பரவலாக காணப்படுகின்றன.
கட்டுவிரியன்: இரவு நேரங்களில் மட்டுமே இரை தேடி செல்லும் இந்த வகை பாம்பு மேல்புறம் பளபளக்கும் கறுமை நிறத்துடன் வால் வரை தொடரும் மெல்லிய வெள்ளைக் குறுக்கு கோடுகளும் காணப்படும். பாம்பின் கீழ்புறம் வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் கொண்டதாக காணப்படும். இதன் நாக்கு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது 1.75 மீட்டர் நீளம் வரை வளரும். கரையான் புற்று, எலி வலை,கற்குவியலில் இவைகள் வாழ்ந்தாலும் நிலத்தில் வாழும் பாம்புகளுக்கு மட்டுமே வீரியம் அதிகம். இந்த பாம்பின் விஷம் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. சென்னை மற்றும் புறநகரில் குறைந்த அளவே காணப்படுகிறது.
கண்ணாடி விரியன்: இரவு நேரத்தில் காணப்படக்கூடிய இந்த பாம்பின் தலை முக்கோண வடிவில் இருக்கும். கண்ணின் பாவை நெடு நீள வடிவத்திலிருக்கும். பழுப்பு அல்லது மஞ்சளம் கலந்த பழுப்பு நிறத்தில் உள்ள இந்த பாம்புகளின் மேல்புறம் பழுப்பு அல்லது மஞ்சள் நிற வட்ட வடிவம் காணப்படும். இது1.80 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. முட்புதர் மற்றும் மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். மிக நீளமான விஷப் பற்களை கொண்ட இந்த பாம்பிம் விஷம் இதயத் திசுக்களையும், ரத்த ஓட்ட அமைப்பினையும் தாக்கி மரணம் விளைவிக்க கூடியது. இந்த வகை பாம்பும் சென்னை புறநகரில் மிகக்குறைந்த அளவே காணப்படுகின்றன.
சுருட்டை விரியன்:
இந்த பாம்பின் கண்கள் மிகப்பெரியதாக காணப்படும். வெளிர் மற்றும் அடர் பழுப்பு செந்நிறம், சாம்பல் அல்லது மணல் நிறத்துடன் உடலின் மேற்புறத்தில் வளைவு வடிவங்களை கொண்டு காணப்படும். இதன் தலையின் மேற்புறம் அம்பு வடிவம் காணப்படும். 50 செ.மீ., நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 80 செ.மீ., நீளம் வரை வளரக் கூடியது. வறண்ட பரந்த நிலப்பரப்புகள் மற்றும் அதிக மழை பெய்யும் மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். பகல் நேரத்தில் இந்த பாம்புகள் மரப்பட்டைகள்,கற்களுக்கு இடையிலும் கற்றாழை போன்ற செடிகள் அடியிலும் காணப்படும். இந்த பாம்பின் விஷம் ரத்த மண்டலத்தை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தென்சென்னை கடற்கரை பகுதிகளில் இந்த வகை பாம்புகள் ஓரளவு காணப்படுகின்றன.
விஷமற்ற பாம்புகள்:
சாரைப்பாம்பு, நீர்சாரை, மலைப்பாம்பு வகைகள், வெள்ளிக்கோல் வரையன், பச்சை பாம்பு, கொம்பேறி மூக்கன்,மண்ணுளி பாம்பு, பவழப்பாம்பு, அழகு பாம்பு, பிரைடல் பாம்பு, நீர்காத்தான்குட்டி, பசுஞ்சாம்பல் நிற தண்ணீர் பாம்பு, சிறு பாம்பு ஆகியவை விஷமற்ற பாம்புகளாகும்.