<1 Walmart Inc. (WMT)
Revenue (TTM): $542.0 billion
Net Income (TTM): $17.9 billion
Market Cap: $392.8 billion
1-Year Trailing Total Return: 22.4%
Exchange: New York Stock Exchange/blockquote>
1962 இல் நிறுவப்பட்ட வால்மார்ட் அதன் பின்னர் உலகின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர்களில் ஒருவராக வளர்ந்துள்ளது. நிறுவனம் தள்ளுபடி கடைகள், சூப்பர் சென்டர்கள், அண்டை சந்தைகள் மற்றும் ஒரு வலுவான ஆன்லைன் தளத்தை இயக்குகிறது. வால்மார்ட் ஆடை மற்றும் ஆடைகள், வீட்டு பொருட்கள், புத்தகங்கள், நகைகள், உணவு மற்றும் பானம், மருந்து பொருட்கள் மற்றும் வாகன உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்கிறது.
2)china petrolium
Revenue (TTM): $355.8 billion
Net Income (TTM): $486.6 million
Market Cap: $53.5 billion
1-Year Trailing Total Return: -21.7%
Exchange: New York Stock Exchange
சீனா பெட்ரோலியம் & கெமிக்கல் என்பது பல்வேறு வகையான பெட்ரோ கெமிக்கல் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர். நிறுவனத்தின் தயாரிப்புகளில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், செயற்கை ரப்பர்கள் மற்றும் பிசின்கள், ஜெட் எரிபொருள் மற்றும் ரசாயன உரங்கள் ஆகியவை அடங்கும். சினோபெக் என்றும் அழைக்கப்படும், சீனா பெட்ரோலியம் மற்றும் கெமிக்கல் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு, எரிவாயு மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களில் ஒன்றாகும். இது சீன மக்கள் குடியரசின் மாநில கவுன்சிலால் நிர்வகிக்கப்படுகிறது
3)amazon
Revenue (TTM): $321.8 billion
Net Income (TTM): $13.2 billion
Market Cap: $1.6 trillion
1-Year Trailing Total Return: 78.5%
Exchange: NASDAQ
சந்தை தொப்பி மூலம் உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் அமேசான். நிறுவனம் ஒரு ஆன்லைன் புத்தக விற்பனையாளராகத் தொடங்கியது, அதன் பின்னர் கிட்டத்தட்ட ஒவ்வொரு வகை சில்லறை விற்பனையையும் உள்ளடக்கியது. அமேசான் தனது மின்வணிக தளம் மூலம் தயாரிப்புகளை விற்பனை செய்வதைத் தவிர, முழு உணவுகள் சந்தை மற்றும் வீட்டு பாதுகாப்பு நிறுவனமான ரிங் உள்ளிட்ட துணை நிறுவனங்களை அமேசான் கொண்டுள்ளது. கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகள், அமேசான் பிரைம் போன்ற சந்தா தயாரிப்புகள் மற்றும் ஸ்ட்ரீமிங் திரைப்படங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு ஆகியவை அமேசானின் வணிகத்தின் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதிகள்
4)4 PetroChina Co. Ltd. (PTR)
Revenue (TTM): $320.0 billion
Net Income (TTM): -$1.8 billion
Market Cap: $59.2 billion
1-Year Trailing Total Return: -34.8%
Exchange: New York Stock Exchange
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பெட்ரோசீனா எண்ணெய் ஆய்வு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. இது பெட்ரோ கெமிக்கல் தயாரிப்புகளையும் தயாரிக்கிறது. பெட்ரோசீனா என்பது சீன அரசுக்கு சொந்தமான சீனா தேசிய பெட்ரோலியக் கழகத்தின் பரிமாற்ற-பட்டியலிடப்பட்ட கிளை ஆகும்.
5)#5 Apple Inc. (AAPL)
Revenue (TTM): $273.9 billion
Net Income (TTM): $58.4 billion
Market Cap: $2.0 trillion
1-Year Trailing Total Return: 121.3%
Exchange: NASDAQ
ஸ்மார்ட்போன்கள், தனிநபர் கணினிகள், டேப்லெட்டுகள், அணியக்கூடிய சாதனங்கள், வீட்டு பொழுதுபோக்கு சாதனங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான நுகர்வோர் தொழில்நுட்ப தயாரிப்புகளை ஆப்பிள் வடிவமைத்து, தயாரித்து சந்தைப்படுத்துகிறது. நிறுவனத்தின் மிகவும் பிரபலமான தயாரிப்புகளில் அதன் ஸ்மார்ட்போன்களின் ஐபோன் வரி மற்றும் கணினிகளின் மேக் வரி ஆகியவை அடங்கும். ஆப்பிள் வேகமாக வளர்ந்து வரும் சேவை வணிகத்தை உருவாக்குகிறது, டிஜிட்டல் உள்ளடக்க கடைகளை இயக்குகிறது, ஸ்ட்ரீமிங் வீடியோ கேம்களை விற்பனை செய்கிறது மற்றும் தேவைக்கேற்ப பொழுதுபோக்கு உள்ளடக்கத்திற்கான தளமான ஆப்பிள் + போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகளை வழங்குகிறது.
6)#6 CVS Health Corp. (CVS)
Revenue (TTM): $264.0 billion
Net Income (TTM): $8.3 billion
Market Cap: $77.2 billion
1-Year Trailing Total Return: -3.6%
Exchange: New York Stock Exchange
சி.வி.எஸ் ஒரு ஒருங்கிணைந்த மருந்தியல் சுகாதார வழங்குநர். நிறுவனம் யு.எஸ் முழுவதும் மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவிலும் மருந்துக் கடைகளின் சங்கிலியை இயக்குகிறது. சில்லறை விற்பனையைத் தவிர, சி.வி.எஸ் மருந்தியல் நன்மை மேலாண்மை சேவைகள், மெயில் ஆர்டர் மருந்தியல் சேவைகள் மற்றும் நோய் மேலாண்மை திட்டங்களை வழங்குகிறது.
7)#7 Royal Dutch Shell PLC (RDS.A)
Revenue (TTM): $263.1 billion
Net Income (TTM): -$11.3 billion
Market Cap: $110.1 billion
1-Year Trailing Total Return: -46.5%
Exchange: New York Stock Exchange
நெதர்லாந்தை தளமாகக் கொண்ட, ராயல் டச்சு ஷெல் அதன் துணை நிறுவனங்கள் மூலம் பெட்ரோலியத்தை ஆராய்ந்து, உற்பத்தி செய்து சுத்திகரிக்கிறது. உலகெங்கிலும் எரிவாயு நிலையங்களை இயக்குவதோடு கூடுதலாக, ஷெல் எரிபொருள்கள், மசகு எண்ணெய் மற்றும் பிற இரசாயனங்கள் தயாரித்து விற்பனை செய்கிறது
8)#8 Berkshire Hathaway Inc. (BRK.A)
Revenue (TTM): $260.5 billion
Net Income (TTM): $22.2 billion
Market Cap: $520.9 billion
1-Year Trailing Total Return: 6.5%
Exchange: New York Stock Exchange
பெர்க்ஷயர் ஹாத்வே என்பது பன்முகப்படுத்தப்பட்ட ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆகும், இது பரந்த அளவிலான துறைகள் மற்றும் தொழில்களில் நிறுவனங்களை வைத்திருக்கிறது. காப்பீடு, எரிசக்தி உற்பத்தி, சரக்கு ரயில் போக்குவரத்து, சில்லறை விற்பனை மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் போன்றவை இதில் அடங்கும். நிறுவனம் பங்கு பத்திரங்கள் மற்றும் வழித்தோன்றல்களின் கணிசமான போர்ட்ஃபோலியோவையும் கொண்டுள்ளது
9)#9 Toyota Motor Corp. (TM)
Revenue (TTM): $248.6 billion
Net Income (TTM): $14.4 billion
Market Cap: $182.7 billion
1-Year Trailing Total Return: 1.8%
Exchange: New York Stock Exchange
டொயோட்டா ஒரு ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமாகும், இது உலகெங்கிலும் பயணிகள் கார்கள், லாரிகள் மற்றும் பேருந்துகளை தயாரிக்கிறது, விற்பனை செய்கிறது, குத்தகைக்கு விடுகிறது மற்றும் சரிசெய்கிறது. நிறுவனம் பாகங்கள் மற்றும் உபகரணங்களை விற்பனை செய்கிறது மற்றும் நிதி சேவைகளை இயக்குகிறது. டொயோட்டா அதன் முக்கிய வணிகத்தைத் தவிர, பயணக் கட்டுப்பாடு மற்றும் மின்னணு கட்டண முறைகளைப் பயன்படுத்தி புத்திசாலித்தனமான போக்குவரத்து அமைப்புகளையும் உருவாக்குகிறது மற்றும் இன்பப் படகுகள் மற்றும் வீடுகளையும் உருவாக்குகிறது
10)#10 Volkswagen AG (VWAGY)
Revenue (TTM): $247.4 billion
Net Income (TTM): $6.4 billion
Market Cap: $94.8 billion
1-Year Trailing Total Return: 11.2%
Exchange: OTc
வாகன விற்பனையால் உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளராக வோக்ஸ்வாகன் குழுமம் உள்ளது .3 ஜெர்மன் நிறுவனம் ஆடம்பர மற்றும் பொருளாதார கார்கள், விளையாட்டு கார்கள், டிரக்குகள் மற்றும் பிற வணிக வாகனங்களை உருவாக்குகிறது, விற்பனை செய்கிறது மற்றும் சரிசெய்கிறது. வி.டபிள்யூ இன் முதன்மை சொகுசு பிராண்ட் ஆடி.
Born: 15 September 1909, Kanchipuram
Spouse: Rani Annadurai (m. 1930–1969)
Books: Anna (C.N. Annadurai): Reader
Previous offices: Chief Minister of Tamil Nadu (1969–1969), MORE
Children: Ilangovan, C.N.A. Parimalam, Gouthaman
Died: 3 February 1969, Chennai
1965 மதராஸ் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
முதன்மைக் கட்டுரை:
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
இந்தியா 1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது[32]. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை:
“ இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது, அது பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதால். ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே. அல்லது ஏன் மயில் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது?, உண்மையில் பெரும்பான்மை பறவை காகம் தானே[34] ”
“ தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாகும்வரை, எனக்கு உண்மையாக திருப்தியே கிடையாது.
இந்திய மொழிகளில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக வைப்பது - இந்தியை தாய்மொழியாகக் கொண்ட நல்ல கால் உடையவர்களுக்கும் இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத ஊனக்கால் உடையவர்களுக்கும் இடையே வைக்கும் ஓட்டப் பந்தயம் போன்றது.
மொழி உணர்வுக்கு மதிப்பு அளிக்கப்படுவது உண்மையாயின், ஒரு மொழி எத்தனை சதவிகிதத்தினரால் பேசப்படுகிறது என்ற ஆராய்ச்சியே அநாவசியமானது.
”
கார்ல் மார்க்ஸ்
ஆளும் வர்க்கத்துக்கும் அரசுகளுக்கும் எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததால், பல நாடுகளில் இருந்தும் துரத்தப்பட்ட அந்த மாபெரும் சிந்தனையாளர், அப்போது லண்டனில் குடியிருந்தார். அவரது மனைவி வசதியான ஒரு பிரபு குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் காதலுக்குரியவரை மணந்தபோது வறுமையையும் தன் வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்டார். நிரந்தரமற்ற வேலை, ஆளும் வர்க்கம் கொடுத்த நெருக்கடிகள், கொன்று தின்னும் வறுமை என வாழ்ந்தாலும் அதற்கிடையிலும் காதலை வளர்க்கத் தவறவில்லை அந்த லட்சியத் தம்பதிகள்.
ஒருநாள் இரவு குழந்தைகள் பசியினால் வீறிட்டு அழுதன. அந்தத் தாய் தன் குழந்தைகளுக்குப் பால் கொடுக்க முயற்சித்தாள். ஆனால் அவள் மார்புகளில் பால் சுரக்கவில்லை; ரத்தம்தான் சுரந்தது. தொடர்ச்சியான வறுமை துரத்திய நிலையில், ஒரு குழந்தை இறந்தபோது, அந்தக் குழந்தையின் உடலைப் புதைக்க அந்த மாபெரும் சிந்தனையாளனிடம் பணமில்லை. தன் மேல்கோட்டை விற்றுதான் தன் பிரியத்துக்குரிய குழந்தையின் உடலைப் புதைத்தார். நம்மைப் பொறுத்தவரை கோட் என்பது ஆடம்பரமாக இருக்கலாம். ஆனால் குளிர் நிறைந்த மேற்கத்திய நாடுகளில் கோட் அத்தியாவசியம். தனது கோட்டை விற்றுக் குழந்தையைப் புதைத்த அந்தத் துயரத்துக்குரிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர் காரல் மார்க்ஸ்!உலகின் மாபெரும் சிந்தனையாளர்களில் எப்போதும் காரல்மார்க்ஸ்க்கு ஒரு முக்கிய இடமுண்டு. வறுமையும் நோயும் விடாது துரத்திக்கொண்டிருந்த காலத்தில், மார்க்ஸ் தனது ஏழ்மை குறித்து சிந்தித்து அதற்கான தீர்வுகளைத் தேடிக்கொண்டிருக்கவில்லை. மாறாக, உலகமெங்கும் ஒடுக்கப்பட்ட, வறுமையில் உழன்ற தொழிலாளர் வர்க்கம் குறித்து அவர் சிந்தித்தார். தனக்கு முன்பிருந்த தத்துவவாதிகளின் சிந்தனைகளைக் கரைத்துக் குடித்தவர்.
‘’எல்லாத் தத்துவங்களும் உலகம் எப்படித் தோன்றுகின்றன, இயங்குகின்றன என்று சிந்திக்கின்றன. நமது வேலை உலகம் எப்படி தோன்றியது என்று சிந்திப்பதில்லை, மாறாக உலகத்தை மாற்றியமைப்பதே!” என்றார். அதற்கு என்ன செய்வது? “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் உங்களுக்காகப் பொன்னான ஓர் உலகம் காத்திருக்கிறது!” என்ற புகழ்பெற்ற வாக்கியத்தை மார்க்ஸ் எழுதியது வரலாற்றின் பல திருப்பங்களுக்குக் காரணமானது.’ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே” என்ற மார்க்ஸ், உலக மனிதகுலத்தின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்தார். ஒவ்வொருகாலகட்டத்திலும் மனித இனம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது, இந்த மாற்றங்களுக்கு எப்படி மனித உழைப்பு காரணமாக இருக்கிறது என்ற ஆழமான ஆய்வுகளை முன்வைத்தார். உழைப்பினால் கிடைத்த பயன்களை அனைவரும் சமமாகப் பகிரும்வரை பேதங்கள் இருந்தது இல்லை. ஆனால் பகிர்ந்ததுபோக, மிஞ்சியிருந்தது ‘உபரி மதிப்பு’ என்றும் இந்த உபரி மதிப்பே மீண்டும் ‘மூலதனம்’ ஆகிறது என்றும் மூலதனத்தின் மூலமே வர்க்கங்கள் தோன்றின என்றும் வரலாற்றின் முடிச்சுகளை அவிழ்த்தார்.
இப்படியான ஆய்வு முடிவுகளை வந்தடைவதற்கு மார்க்ஸ் உழைத்த உழைப்பு கொஞ்சநஞ்சமல்ல. அதற்கு அவர் கொடுத்த விலைகளும் கொஞ்சமல்ல.
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட சம்பவம், மார்க்ஸின் வாழ்க்கையில் ஒரு சின்ன துயரக்கீற்று மட்டுமே. தன் காதல் கணவன் மாபெரும் சிந்தனையாளன் என்பதைப் புரிந்துகொண்டு, எல்லாவிதத் துயரங்களையும் ஏற்றுக்கொண்ட ஜென்னி மார்க்ஸ், உலகின் அற்புதமான காதலிகளின் வரலாற்றில் நிரந்தரமாக நினைவுகூரப்படுவார், அதேபோல்தான் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் இருவருக்கும் இடையிலான நட்பும்கூட. ஏங்கெல்ஸும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்தான். மார்க்ஸின் சிந்தனைகளும் நூல்களும் வெளிவருவதற்குப் பொருளாதார அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர் ஏங்கெல்ஸே.
மார்க்ஸ் பல நாடுகளில் இருந்து துரத்தப்பட்டார். வாடகை கொடுக்க முடியாமல் பல வீடுகளில் இருந்தும் துரத்தப்பட்டார், ஆனாலும் அவர் தன் சிந்தனைகளையோ செயல்பாடுகளையோ நிறுத்திக்கொள்ளவில்லை. மார்க்சின் சிந்தனையால் இந்த மனித குலத்துக்குக் கிடைத்த நிகரற்ற அறிவுக் களஞ்சியம் ‘மூலதனம்’. அதற்குப் பின் கோடிக்கணக்கான புத்தகங்கள் உலகின் பல பாகங்களில் இருந்து உருவாகிவிட்டபோதும் ‘மூலதனம்’ எப்போதும் உலகின் ஆகச் சிறந்த நுால்களில் ஒன்றாக இன்றும் இருக்கிறது.உற்பத்தி உறவுகள், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், அரசு என்னும் வர்க்க நலன் பேணும் கருவி, கருத்தை முதலாகக் கொண்டுதான் சமூகம் இயங்குகிறது என்னும் பார்வைக்கு மாறாக பொருளின் அடிப்படையில் சமூக மாற்றத்தை ஆராயும் பொருள்முதல்வாதம், மதம் மனிதனுக்கு அபினாக இருந்ததோடு எப்படி இரக்கமற்ற உலகத்தின் இரக்கமுள்ள ஆன்மாவாக மாறியது என்னும் சிந்தனை முன்னெடுப்பு, அந்நியமாதல் என மார்க்சின் ஆய்வுகள் விரிந்து பரந்தவை. மார்க்சின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட அவசியம் படித்து விவாதிக்கப்பட வேண்டியவை அவரது சிந்தனைகள். ‘தொழிலாளர் வர்க்கம் ஒன்றிணைந்து புரட்சி செய்து, முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் கருவியான அரசையும் தூக்கியெறிந்து, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தும்’ என்ற அவரது கனவை லெனின் ரஷ்யாவில் நடத்திக்காட்டினார்.சோவியத் யூனியனின் அனுபவங்களில் இருந்து சற்றே வேறுபட்டு, உள்நாட்டு அனுபவங்களுடனும், படிப்பினைகளுடனும் பாட்டாளி வர்க்கத்தையும், விவசாய வர்க்கத்தையும் ஒன்றிணைத்து சீனாவில் புரட்சியை ஏற்படுத்தினார் மாவோ. வியட்நாம், கியூபா எனப் பல நாடுகளிலும் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். எல்லா நாடுகளிலும் மார்க்ஸ் விரும்பியபடி ஒரு முழுமையான, வர்க்கபேதங்கள் அற்ற சமுதாயம் உருவானது என்று சொல்ல முடியாது. சோவியத் யூனியன் உடைவு என்பது உலகம் எங்கிலும் மார்க்சியச் சிந்தனையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் சோர்வை ஏற்படுத்தியது. ஆனாலும் 90களுக்குப் பிறகு உருவான உலகமயமாக்கலும் புதிய பொருளாதாரக் கொள்கையும் எந்த அற்புதங்களையும் விளைவிக்கவில்லை.
விவசாயிகளின் தற்கொலை, அந்நிய மூலதனங்கள் உள்ளூர்த் தொழிலாளர்களைச் சுரண்டுவது, முன்னேறிய நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, கொடூரமான நுகர்வுக் கலாசாரம், சுற்றுச்சூழல் சீர்கேடு, ஏகாதிபத்தியத்தின் குழந்தையாய் வளர்ந்துள்ள மதத் தீவிரவாதம் ஆகியவை முதலாளித்துவத்தின்மீது கடுமையான விமர்சனங்களைத் தற்போது ஏற்படுத்தியுள்ளன என்பதை மறுக்கமுடியாது.
மார்க்ஸின் சிந்தனைகள் எப்போதும் இறுதியானவை. மார்க்ஸுக்குப் பிறகு உலகின் பல்வேறு நாடுகளில் தோன்றிய மார்க்சியச் சிந்தனையாளர்கள் காலத்தின் பாடங்களைக் கணக்கெடுத்து, மார்க்சியத்தைச் செழுமைப்படுத்தத்தான் செய்கின்றனர். ஒதுக்கப்பட்ட மக்களுக்காக எந்தத் தியாகங்களையும் செய்யும் செம்படை எல்லா நாடுகளிலும் இருக்கிறது.
மனிதகுலம் உள்ளளவும் மார்க்ஸ் நினைக்கப்படுவார். ஏனெனில் அவர் தேசியம், மொழி, இனம் என எல்லாவற்றுக்கும் அப்பால் உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்காகச் சிந்தித்த மாமனிதன்.
THE LENIN BIOGRAPHY IN TAMIL
https://youtu.be/wlSg-lbto6E
இராசராசனின் ஒரே மகன் இராசேந்திரன். தாத்தா சுந்தர சோழனை.
இவரது இயற்பெயர் மதுராந்தகன் AC.1012 ஆம் ஆண்டில் இராசேந்திரன் என்று அழைக்கப்பட்டார்.
கிபி 1014 ஆம் ஆண்டில் அரச பதவியை பெற்றான்.
" பூர்வதேசமும், கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரிவர்மன்" என்று கல்வெட்டுகள் புகழ்ந்து கூறுகின்றன.
சோழ சாளுக்கிய பகையை போன்றே தோழர்- சிங்களருக்கு இடையேயான விரோதமும் தொடர்ந்தது.
இராசராசன் இலங்கையின் வடபகுதியை தனது ஆதிக்கத்தின் கீழ்கொண்டு வந்த போதிலும், பாண்டிய மன்னன் ராஜசிம்மன் இலங்கை மன்னனிடம்ஒப்படைத்த அரச சின்னங்களைப் கைப்பற்ற முடியவில்லை.மேலும் இலங்கை மன்னன்ஐந்தாம் மகிந்தன் சோழனிடம் இழந்த பகுதிகளை மீட்பதில் முனைப்பாக இருந்தார். எனவே இரண்டு காரணங்களுக்காக இராசேந்திரன் இலங்கை மீது படையெடுத்தார்.இலங்கை முழுவதையும்கைப்பற்றிசோழ நாட்டுடன் இணைப்பது, பாண்டிய மன்னன் ஒப்படைத்த அரச சின்னங்களை அடைவது.மேற்கண்ட இரண்டு நோக்கங்களையும் நிறைவேற்றும் பொருட்டு இராசேந்திரன் மூன்றாவது ஆட்சியாண்டில் 1017 ஆம் ஆண்டில் இலங்கை மீது படையெடுத்தார். இப்போரில் இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தன் தோற்கடிக்கப்பட்டார். தோற்கடிக்கப்பட்ட இலங்கை அரசன் கைது செய்யப்பட்டு சோழ நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாண்டிய மன்னன் ஒப்படைத்த அரச சின்னங்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மூலம் இராசேந்திரன் இரண்டு நோக்கங்களும் நிறைவேறின. இருப்பினும் சிங்களவர் மகிந்தவின் மகன் தாசப்பா தோழர்களுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டார். அக்கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது. இலங்கையில் சோழர் ஆதிக்கம் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலம் வரை நீடித்தது.பாண்டியர்களைப் போன்று சேரர்களும் சோழர்களின் மேலாதிக்கத்தை ஏற்க வில்லை. எதிர்த்த வண்ணம் இருந்தனர். இவர்களது எதிர்ப்பை முறியடிப்பதற்காக இராசேந்திரன் சேர நாட்டின் மீது போர்தொடுத்தார். கடுமையான போருக்குப்பின் சேரநாடு பணிந்தது. சேர நாடு மதுரையில் இருந்த சோழ ஆளுநரின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.