புதன், 24 பிப்ரவரி, 2021

இராசேந்திர சோழன் வரலாறு-THE RAJENDRA CHOLAN BIOGRAPHY HISTORY IN TAMIL | TAMIZHA TAMIZHA MEDIA

இராசராசனின் ஒரே மகன் இராசேந்திரன். தாத்தா சுந்தர சோழனை. இவரது இயற்பெயர் மதுராந்தகன் AC.1012 ஆம் ஆண்டில் இராசேந்திரன் என்று அழைக்கப்பட்டார். கிபி 1014 ஆம் ஆண்டில் அரச பதவியை பெற்றான். " பூர்வதேசமும், கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரிவர்மன்" என்று கல்வெட்டுகள் புகழ்ந்து கூறுகின்றன. சோழ சாளுக்கிய பகையை போன்றே தோழர்- சிங்களருக்கு இடையேயான விரோதமும் தொடர்ந்தது. இராசராசன் இலங்கையின் வடபகுதியை தனது ஆதிக்கத்தின் கீழ்கொண்டு வந்த போதிலும், பாண்டிய மன்னன் ராஜசிம்மன் இலங்கை மன்னனிடம்ஒப்படைத்த அரச சின்னங்களைப் கைப்பற்ற முடியவில்லை.மேலும் இலங்கை மன்னன்ஐந்தாம் மகிந்தன் சோழனிடம் இழந்த பகுதிகளை மீட்பதில் முனைப்பாக இருந்தார். எனவே இரண்டு காரணங்களுக்காக இராசேந்திரன் இலங்கை மீது படையெடுத்தார்.இலங்கை முழுவதையும்கைப்பற்றிசோழ நாட்டுடன் இணைப்பது, பாண்டிய மன்னன் ஒப்படைத்த அரச சின்னங்களை அடைவது.மேற்கண்ட இரண்டு நோக்கங்களையும் நிறைவேற்றும் பொருட்டு இராசேந்திரன் மூன்றாவது ஆட்சியாண்டில் 1017 ஆம் ஆண்டில் இலங்கை மீது படையெடுத்தார். இப்போரில் இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தன் தோற்கடிக்கப்பட்டார். தோற்கடிக்கப்பட்ட இலங்கை அரசன் கைது செய்யப்பட்டு சோழ நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாண்டிய மன்னன் ஒப்படைத்த அரச சின்னங்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மூலம் இராசேந்திரன் இரண்டு நோக்கங்களும் நிறைவேறின. இருப்பினும் சிங்களவர் மகிந்தவின் மகன் தாசப்பா தோழர்களுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டார். அக்கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது. இலங்கையில் சோழர் ஆதிக்கம் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலம் வரை நீடித்தது.பாண்டியர்களைப் போன்று சேரர்களும் சோழர்களின் மேலாதிக்கத்தை ஏற்க வில்லை. எதிர்த்த வண்ணம் இருந்தனர். இவர்களது எதிர்ப்பை முறியடிப்பதற்காக இராசேந்திரன் சேர நாட்டின் மீது போர்தொடுத்தார். கடுமையான போருக்குப்பின் சேரநாடு பணிந்தது. சேர நாடு மதுரையில் இருந்த சோழ ஆளுநரின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
the rajendra cholaa

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

motivations quotes by apj abdul kalam