News readers,socialist, story readers ,the selfrespect persons ,socialist leaders , communism
செவ்வாய், 8 டிசம்பர், 2020
தேவதாசி ஒழிப்பு முறை டாக்டர் முத்துலட்சுமி
#தேவதாசி!
௦
20-ம் நூற்றாண்டு தொடக்கம் வரை தேவதாசிகள் இல்லாத கோவில் களே தென்னிந்தியாவில் இல்லை.
*
இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவரடியார்கள் இருந்ததாக தெரிய வருகின்றது.
௦
தேவரடியார்கள் வேறு,தேவதாசிகள் வேறு என்ற கருத்தை,தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் முன் வைக்கின்றனர்.
°
கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களைத் தவிர,விரும்பும் பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை, கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.
௦
இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களைப் பற்றிய இந்த வரலாறு தெரியாது.
°
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்புப் பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி, இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார்.
௦
சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த இராகவய் யர், ஷேசகிரி அய்யர், மு.வ.இராம நாத அய்யர் எனும் பார்ப்பன அணி யினர் இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.
௦
இதற்குப் பார்ப்பனர்கள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து, நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர,
௦
சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி,தேவதாசிப் பெண்களை வைத்தே, இந்த தீர்மானத்தை எதிர்த்துப் போராட வைத்தனர்.
௦
இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள்.
௦
இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் !என்ன செய்வது" என்று எம்.எல்.ஏ முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.
௦
அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி, நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.
௦
பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு, அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தார்.
௦
அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால், அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் !
௦
அவர்கள் தங்களை அர்ப்பணித்து, தொண்டு செய்வதால்,புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகி றார்கள்.'' என்றார்
௦
அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பார்ப்பனர்களைப் பார்த்து,"தேவதாசி ஒழிப்புத் தீர்மானத்திற்கு ,எதிராகப் பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன்.
௦
இதுவரையில்,எங்க ஜாதியிலேயே, (இசை வேளாளர்)கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தையும் சேர்த்து வைத்துள்ளார்கள்.
இனிமேல், அந்தத் தொண்டை உங்கள் பிராமணப் பெண்களே செய்யட்டும்...!
௦
நீங்களும் புண்ணியம் சேர்த்துக் கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்புக் கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டுப் போகாது!" என்றார்.
௦
இதைக் கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில் கவ்வக் கொடுத்து, இன்னொரு செருப்பை சாணியில் முக்கி அடித்தது போல் இருந்தது.
௦
இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான், தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
௦
#பெரியார்_என்றாலே, ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று, இப்பொழுதாவது புரிகிறதா..?
௦
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பாம்புகள்: உலகளவில் 2,968 வகையான பாம்புகள் உள்ளன. இதில், இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பாம்பு வகையில் நான்...
-
காரல் மார்க்ஸ் சிந்தனைகள் : 1) ஒரு மனிதனை ஒரு மீன் பிடிக்கவும், அதை நீங்கள் அவனுக்கு விற்கலாம். ஒரு மனிதனை மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள், நீ...
-
செவ்வாய் கிரகம் முன்னுரை செவ்வாய் கிரகம். இது சூரியனில் இருந்து நான்காவது கிரகம். இது பூமியைத் தாண்டிய அடுத்த கிரகம். செவ்வாய் சூரியனில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக